jothida thendral ASTRO ASHOKJEE

Name

Email *

Message *

Monday, November 23, 2020

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்-




 உத்திரட்டாதி நட்சத்திராதிபதி சனி பகவான் என்பதால் பேச்சில் வேகம் இருந்தாலும் எப்பொழுதும் உண்மையே பேசக் கூடியவர்கள். சொன்ன சொல்லை தவறாமல் காப்பாற்றுவார்கள். மிகுந்த சாமர்த்திய சாலி. வெற்றிலை போடுவதிலும் அடிக்கடி பயணம் மேற்கொள்வதிலும் அதிக ஆர்வம் இருக்கும். மனதில் எப்பொழுதும் ஒரு தேடல் இருக்கும். யாருக்காகவும் போலியான வாழ்க்கை வாழ மாட்டார்கள். சாதுவான குணமிருந்தாலும் முன் கோபம் வந்தால் முரட்டு தனமும் வெளிப்படும். நட்பு வட்டாரங்கள் அதிகம் இருந்தாலும் யாரிடமும் எந்த உதவியும் கேட்க மாட்டார்கள். கல்வி சுமாராகத் தானிருக்கும். பிடிவாத குணமும், பேச்சில் வேகம் விவேகமும் நிறைந்தவர்கள். ஆழமாக யோசித்து செயல் படுவதால் தொட்டதெல்லாம் துலங்கும். பேச்சை விட செயலில் தான்  ஈடுபாடு இருக்கும். நீதி, நேர்மையுடன் வாழ்வார்கள். எதிலும் நடு நிலைமையுடனிருப்பார்கள். அகன்ற மார்பும் காதுகளும் இவர்களுக்கு அழகை சேர்க்கும். தன்னுடைய கடினமான உழைப்பால் முன்னேறி உயர்வான நிலையை அடைந்து சுகமான வாழ்க்கையை வாழ்வார்கள்.


தொழில்;
     
எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் உண்மையே பேசி பல நட்புகளைப் பெறுவர். தர்ம முறையில் பணம் சம்பாதிப்பார்கள். சற்று பிடிவாத குணமிருந்தாலும் எடுக்கும் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பார்கள். கதை கவிதை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சட்டம் பயிலுபவர்களாகவும், பத்திரிகை ஆசிரியர்களாகவும் வானவியல், ஜோதிடம், மருத்துவம் வங்கிப் பணி போன்றவற்றிலும் பணி புரிவார்கள், பள்ளி கல்லூரி, கன்ஸ்ட்ரக்ஷன், சிட்பண்ட்ஸ், பதிப்பகம் போன்றவற்றையும் நடத்துவார்கள் 27 வயது முதல் வாழ்வில் முன்னேற்றத்தை காண முடியும். 51 வயதில் சமூக நலப் பணிகளில் ஈடுபட்டு நாட்டையே ஆளக் கூடிய யோகமும் உண்டாகும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணம் சம்பாதிப்பார்கள். ஜீவன ரீதியாக சம்பாதிக்கும் யோகத்தை பெற்றவர்கள்.

பொருந்தாத நட்சத்திரங்கள்
      பரணி, பூசம், அனுஷம், பூராடம், பூரம் ஆகிய நட்சத்திரங்கள் பொருந்தாது.
-


ராகு சூரியன் சேர்க்கை ராகு சந்திரன் சேர்க்கை ராகு, சனி சேர்க்கை





 ராகு சூரியன் சேர்க்கை பெற்றால் தந்தைக்கு தோஷம், தந்தை வழி உறவினர்களிடம் பகை, எந்தபாவத்தில் இருக்கிறார்களோ அந்த பாவத்தை பாதிக்கும் அமைப்பு உண்டாகும். அதுவும் 8ல் அமையப் பெற்றால் இருதய கோளாறு கண்களில் பாதிப்பு, எலும்புருக்கி நோய், உஷ்ண நோய்கள் உண்டாகும்.

ராகு சந்திரன் சேர்க்கை பெற்றால் மனக் குழப்பம், முன்கோபம், முரண்பட்ட பழக்க வழக்கங்கள், தாய்க்கு உடம்பு பாதிப்பு உண்டாகும்.
ராகு செவ்வாய் சேர்க்கை பெற்று ஒரு ஆண் ஜாதகத்தில் முரட்டுத் தனம், பிடிவாத குணம், விளையாட்டுத் தனம் எதிலும் வேகத்துடனும், விவேகத்துடனும் செயல்படும் நிலை உண்டாகும். பலமிழந்திருந்தால் கடன் தொல்லை, விபத்து, தாழ்வு மனப்பான்மை, தற்கொலை மனப்பான்மை எல்லாம் உண்டாகும். பெண்களுக்கு செவ்வாய் ராகு சேர்க்கை பெற்றால் விதவை, முறை தவறும் சூழ்நிலை உண்டாகும்.

ராகு, சனி சேர்க்கை பெற்றால் வாழ்க்கை என்பது, போராட்டகரமானதாக இருக்கும். முதுமையான தோற்றம், உடல்நிலை பாதிப்பு, தாமத திருமணம், சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நிலை முரட்டுத்தனமான குணம் உண்டாகும்.
கேது பகவான் சூரியன் சேர்க்கைப் பெற்று அமையப் பெற்றால் உஷ்ண நோய்கள், தந்தைக்கு கண்டம், தந்தை வழி உறவினர்களிடம் கருத்து வேறுபாடு உண்டாகும்.

Wednesday, November 18, 2020

ஜாதகம் விளக்கம் எதிர்கால பலன் தொலைபேசி வழியாக +91 6379140429-astrologer tambaram

 1-8ம் இடத்தோடு சனி+செவ்வாய் சம்பந்தப்பட்டாள் ஆழமான குழி/கிணறுகளில் கவணம் தேவை: 

2-இருக்கும் பாவத்தில் இன்னும் வேண்டும் என்பார் ராகு இருப்பதே போதும் என்பார் கேது இதற்கு மேல் இல்லை என்பார் சனி: 

3-குழந்தைக்கு 5ம் இடத்தையும் எதிர்காலத்தில்  குழந்தைகளுடனான உறவுக்கு 9ம் இடத்தை பார்க்கவும்.

4-தொழிலுக்கு 10ம் இடத்தையும் தொழில் முன்னேற்றத்திற்கு 7ம் இடத்தை பார்க்க வேண்டும்.

5-7ம் அதிபதி லக்கினத்தில் இருந்தால்!  என் புருஷன்/பொண்டாட்டி தான் எனக்கு மட்டும் தான்!!




குரு பெயர்ச்சியின் உண்மையும் அதன் தன்மை குரு பெயர்ச்சி பலன் 2020-2021

 




பாசிட்டிவாவா குருபெயர்ச்சி பலன் சொல்ரேன்னு ஏங்கய்யா 12 ராசிக்கும் குரு பெயர்ச்சி நல்லது செய்யும்னு பொய்ய சொல்றீங்க?


பிறந்த ராசிக்கு 2,5,7,9,11 ல் குருவரும்போது எல்லா விதத்திலும் குரு நன்மையை செய்வார். இதற்கு முக்கியமாக தசாபுக்தி ஒத்துழைக்க வேண்டும். அதாவது நாம் ஒன்றைக்கேட்டாலும் கொடுக்க மனம் வரவேண்டும் அல்லவா?


தசா,புக்தி பலன்கள் 75 சதவீதமும் குரு,சனி,ராகு பெயர்ச்சி போன்ற கோச்சார பலன்கள் 25 சதவீதமும் கலந்ததுதான் வாழ்க்கை. 


தசாபுக்தியும் கோச்சாரமும் நல்லா இருந்தா வாழ்க்கை ஜோர். ஏதாவது ஒன்று சறுக்கினாலும் நடுத்தரமான கலப்பு பலன்தான் நடக்கும். 


தசாபுக்தியும் கோச்சாரமும் சரியில்லையென்றால் கொஞ்சம் சிரம்ப்பட வேண்டியதுதான். இதான் விதி.


அதன்படி ரிசபம்,கடகம்,கன்னி,மீனராசிக்கு குருபெயர்ச்சி நல்லாருக்கு. தனுசு ராசிக்கு இன்னும் ஏழரை சனி முடிவிற்கு வராத காரணத்தால் மழைவிட்டாலும் தூவாணம் விடவில்லை என்ற கதைதான்.


மற்ற ராசிக்காரர்களுக்கு ஒரு வருடம் பொருமையாக இருங்க. அல்லது உங்கள் பிறந்த ஜாதகத்தில் நல்ல தசாபுக்தி நடக்குதான்னு பார்த்திட்டு அதற்கு காத்திருங்க.


எல்லா விதத்திலும்  நல்ல பலன் என்றால் என்னவென்று கேட்பீர்கள். எதற்கு காத்திருக்கிறீர்களோ அதற்கு   வாய்ப்பு அதிகமாக உண்டாகும். இதற்கு தசாபுக்தியும் அவசியம் என்பதை மறந்து விடக்கூடாது.


அதாவது வருடாவருடம் குருபெயர்ந்து குருபலன் வந்தாலும் தசாபுக்தி ஒத்துழைக்கும் வருடந்தானே திருமணம் நடக்கும் என்ற அடிப்படை இதில் அடங்கியுள்ளது.

Tuesday, November 17, 2020

ASTROLOGER TAMBARAM CHENNAI-MERCURY PLANET - (புதன் ராகு) சேர்க்கை-புதன் ஆதிக்கம் கொண்ட நபர்கள்


 


1-புதன் ஆதிக்கம் கொண்ட நபர்கள் தனது அறிவாற்றல் பேச்சால் அனைவரையும் கவரக்கூடிய நபர்களாக இருப்பார்கள்

Logical and analytical thinking கொண்டவர்கள் கணக்குப் போட்டு காரியத்தை செய்வதில் கில்லாடிகள் கலகலப்பாகவும் நகைச்சுவை உணர்வுடன் பேசக்கூடியவர்  தன் பேச்சினாலே எளிதில் காரியங்களை சாதித்துக் கொள்வார்கள் பச்சோந்தி குணம் கொண்டவர்கள் இரட்டை மைய தன்மை அதிகம் கொண்டவர்கள் சற்று நம்பகத்தன்மை குறைந்தவர்கள் ஆளுக்கு தகுந்தாற்போல் பேசி தன் காரியத்தை சாதித்துக் கொள்வார்கள் எந்த இக்கட்டான சூழ்நிலையையும் தனது புத்திசாலித்தனத்தை மூலதனமாகக் கொண்டு தப்பித்துக் கொள்வார்கள் பொதுவாக புதன் ஆதிக்கம் கொண்ட நபர்கள் எல்லோரும் விரும்பக் கூடியவர்களாக இருப்பார்கள்


2- உங்கள் ஜாதகத்தில் (புதன் ராகு) சேர்க்கை , புதன் ராகுவின் நட்சத்திரத்தில் இருந்தாலும். ராகு புதன் நட்சத்திரத்தில் இருந்தாலும். காற்றில் கதை எழுதுவது.. கற்பனையில் கோட்டையை கட்டி அதில் வாழ்வது.. இவர்களே இவர்கள் பல மொழிகள் தெரிந்த வித்தகர்கள்.. அதிகம் செலவு செய்ய தூண்டுபவர்கள். பொய்யை உண்மை போல் பேசும் உத்தமர்கள் ஒருதலைக் காதல் நாயகர்கள் இவர்களே. குரு பார்க்க  பலன்களும் மாறுபடும் 🐊

🙏ஜோதிட தென்றல்

Astro Ashokjee

+91 6379140429

+91 7550238450🙏

உங்கள் ஜாதகத்தில் லக்னத்தில் சூரியன்-ASTROLOGY DETAILS CALL 6379140429


 


1-நண்பர்களே: உங்கள் ஜாதகத்தில் லக்னத்தில் சூரியன் இருந்தாலும் அல்லது லக்னத்தை சூரியன் பார்த்தாலும் உங்களிடம் ஒரு ஆளுமை தன்மை இருக்கும்.. 

தான் பெரியவன் என்ற தோரணை. அகங்காரம் ஆசை மற்றும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லாத ஒரு சூழ்நிலை ஏற்படும்.


 இவர்கள் அரசியலுக்கு வந்தால் வெற்றி பெறலாம் குரு பார்த்தால் வெற்றி நிச்சயம் ஆனால் சூரியனுடன் ராகு அல்லது கேது சேர்க்கை பெறக்கூடாது


2-நண்பர்களே: நீங்கள் மீன ராசி மீன லக்னத்தில் பிறந்திருந்தால்( நீர் ராசி) மிக நல்லநேரம் வரத் துவங்கிவிட்டது குரு பெயர்ச்சி ராகு பெயர்ச்சி சனிப்பெயர்ச்சி அனைத்து உங்களுக்கு சாதகமாக உள்ளது...


 📌உங்கள் தொழிலில் கொடிகட்டி பறக்க வேலையில் உயர்வான பதவி செல்ல குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக இருக்கும் இவர்களுக்கு பிறந்த கால ஜாதகத்தில் கன்னிராசியில் செவ்வாய் சனி சேர்ந்திருந்தால் எவ்வளவு சம்பாதித்தாலும் அது உங்களுக்கு கையில் தங்காது..


 📌ஆனால் இப்போ இருக்கும் சூழ்நிலையில் அனைத்து கிரகங்களும் சாதகமாக உள்ளதால் நீங்கள் மனக்கோட்டை கட்டிய அனைத்து செயல்களும் நன்றாகவே இருக்கும் காலம் உங்களுக்கு கனிந்துள்ளது அதில் உள்ள பழங்களை பறிப்பதற்கு நீங்கள் உங்களை தயார் செய்து 

கொள்ள வேண்டும்.


📌சகோதர உறவு மேம்படும்( ராகு மூன்றாமிடத்தில் உள்ளது) திருமணம் உங்கள் விருப்பப்படி நடக்கும் வேலை மாற்றம் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றபடி இருக்கும். அரசியலில் நீங்கள் எதிர்பார்த்த மாற்றங்கள் மற்றும் அரசியலில் வெற்றி பெற மிக அருமையான வாய்ப்புகள்...


3- நீங்கள் கும்ப ராசி OR கும்ப லக்னத்தில் பிறந்தவராக இருந்தாள் இவர்கள் பெரும்பாலும் குடும்பத்தில் மூத்தவராக இருப்பார்... இது ஒரு ஆண் இலக்கணம் ஆன் ராசி மனோதைரியம் உடையவர்கள் கடவுள் பக்தி குறைவாக உள்ளவர்கள் இவர்கள் பேச்சை அனைவரும் கேட்க வேண்டும் என்பது இவர்களின் நோக்கமாக இருக்கும்... தான் செய்யும் வேலையில் கெட்டிக்காரத்தனம் உடையவர்கள்... இந்த ராசிக்கு பாதகாதிபதி ராசி துலாம் ராசி


உன் லட்சியம் எதுவோ அதை நோக்கி பயணம் போ.-ASTROLOGY

 இந்தப் பதிவைப் படிக்கும் முன் உங்கள் மனதை ஒரு நிலைப்படுத்தி பின் படியுங்கள் ஒரு தெளிவு உங்களுக்குள் பிறக்கலாம்! (இது  ஆத்மார்ந்த மூத்தோரின் அறிவுரை*)

♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦

உன்னை வாழ்த்த மனம் இல்லாதவர்கள் இருப்பார்கள். அவர்களைப் பற்றி கவலைப்படாதே.



நீ எதை செய்தாலும் அதில் ஒரு குறையை கண்டுபிடிக்கக்கூடிய மனிதர்களும் இருந்து கொண்டுதான் இருப்பார்கள். அதையும் பெரிது பண்ணாதே.


உன் லட்சியம் எதுவோ அதை நோக்கி பயணம் போ.


ஒன்றை மட்டும் தெரிந்து கொள்.


ஒவ்வொரு மனிதனும்

தனித்தனி ஜென்மங்கள்.


அவர்களுக்கென்று தனித்தனி ஆசாபாசங்கள் இருக்கும். குணங்களும் இருக்கும். அதன் வழியில் தான் அவர்களின் பயணமும் இருக்கும்.

அவர்களை ஒழுங்கு படுத்துகிறேன் என்று வேதனைகளை சுமந்து கொள்ளாதே.அவர்கள் போகும் வரை போகட்டும். போய் ஒரு அனுபவத்தை பெற்றபின் திரும்பி வருவார்கள் .


அதுவரை நீ பொறுமையாக இருக்க வேண்டும். அவர்கள் போன பாதை நல்லதா? கெட்டதா? என்பதை அவர்களாக உணர்ந்தால்தான் அவர்களுக்கு ஒரு உண்மை தெரியும்.

அந்த உண்மையை நீ முன்கூட்டியே சொன்னால் உன்னை அவர்களுக்கு பிடிக்காது.


இதுதான் வாழ்க்கையின் உண்மை.


அவர்களது பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில்தான் அவர்களின் குணங்களும் செயல்களும் இருக்கும்.


அது உடன் பிறந்தவர்களாக இருந்தாலும்,

நண்பர்களாக இருந்தாலும், கணவன், மனைவியாக இருந்தாலும், பெற்ற

குழந்தைகளாக இருந்தாலும்,

பேரன் பேத்திகளாக இருந்தாலும்,

உறவுகளாக இருந்தாலும்,

அவர்களது பிறவி குணம் ஒரு போதும் மாறாது. எதைச் செய்ய வந்தார்களோ அதை செய்வதுதானே அவர்களின் விதி.  இதை நீ மாற்றி அமைக்க முடியுமா?


ஒதுங்கி நின்று வேடிக்கை பார்! பந்த பாசத்தில் உள்ளே விழுந்து அறிவுரை சொல்லுகிறேன் என்று கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டிருக்காதே.


அவர்களுக்கு அனுபவம் தான் குரு.

அந்த அனுபவம் ஏற்பட்ட பிறகு தன்னை மாற்றிக் கொள்வதற்கு அவர்களுக்கு விதி இருந்தால் தன்னை திருத்திக் கொள்வார்கள். அதுவரை நீ பொறுமையாக இரு.


செயற்கையாக ஒரு குணத்தை  உருவாக்கி உன்னிடம் அன்பை காட்டினாலும் தான் யார் ?,தன் குணம் என்ன ?,என்பதை ஒரு நாள் வெளிப்படுத்தி விடுவார்கள். 

எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தோடு இருந்து கொள்ள பழகிக் கொள்.


நாம்வந்து போகும் உலகத்தில் பிறந்திருக்கிறோம்.

அவரவர்களுக்கு என்ன வேஷம் கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதைத் தவிர வேறு எதையும் செய்து காட்ட முடியாது.

எல்லையில்லாத அன்பை வைத்திருந்தேன் என்னை ஏமாற்றி விட்டார்கள் என்று புலம்பிக் கொண்டு இருக்காதே. கடலுக்கும் ஒரு எல்லை வைத்திருக்கிறான் இறைவன்.

அதையும் மீறி சிலவேளைகளில் இறைவன் வகுத்த எல்லையை கடல் தாண்டி விடுகிறது. இயற்கையின் சுபாவங்கள் சில நேரங்களில் தங்களை வெளிப்படுத்தி விடும்.


நீ உன்னை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறாயோ அப்படி வைத்துக் கொண்டு வாழப் பழகிக் கொள். அதில் நன்மை வந்தாலும் ,தீமை வந்தாலும் ,உனக்கும் ஒரு அனுபவம் கிடைக்கும் .அதை வைத்து உன்னையும் திருத்திக் கொள்ளலாம்.


இன்பமானாலும் துன்பமானாலும்

அதை நீயே சந்திக்க கற்றுக்கொள்.

அதை பகிர்ந்து கொள்வதற்கு ஒரு துணையைத் தேடாதே.


உன் இன்ப துன்பத்தில் பங்கு பெறுவதற்கு இந்த பிரபஞ்சத்தில் ஒருவர் பிறந்திருந்தால் நிச்சயம் அவர் உன்னை கைவிடாமல் உன்னோடு சேர்ந்தே பயணிப்பார். அது உன் பிறவி பிராப்தத்தை பொறுத்து இருக்கிறது அப்படி அது நடந்து விட்டால், எந்த சூழ்நிலையிலும் உன்னோடு இணைந்தே இருப்பார்


பெண்ணாக இருந்தாலும் ,ஆணாக இருந்தாலும் ,வரும் துன்பத்தை எதிர்கொள்ளக்கூடிய ஆற்றலை உருவாக்கிக் கொள்.


மனிதன் மீது வைக்கும் நம்பிக்கையை விட இறைவன் மீது வைக்கும் நம்பிக்கையை அதிகரித்துக் கொள்.


உன் கண்ணீரும் உன் கவலையும்

உன்னை பலவீனமாக காட்டிவிடும்.


அழுவதாலும் சோர்ந்து போவதாலும்

ஒன்றும் நடக்கப்போவதில்லை.

எப்படி இருந்தாலும் நீதான் அந்த சுமையை சுமந்து ஆகவேண்டும்.


அழுது சுமப்பதை காட்டிலும்.

ஏற்று சுமப்பது உனக்கு சிரமம் இல்லாமல் இருக்கும்.


தைரியமும் தன்னம்பிக்கையும் தான் 

ஒரு மனிதனை உலகத்தில் வாழ வைக்கும் என்ற உண்மையை உணர்ந்துகொள்.


இந்த பக்குவத்தை அடைந்துவிட்டால்

 எத்துன்பமும் உன்னை நெருங்காது என்பதை உணர்ந்துகொள்.


                 வாழ்க🙌வளமுடன்


                   (அன்பே🔥சிவம்)

ஜாதகம் பார்க்க தொடர்பு கொள்ளுங்கள் சிறந்த ஜோதிடர் தாம்பரம் பல்லாவரம் முடிச்சூர்-ASTRO ASHOKJEE





பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு இராஜ்ஜியத்தை ஆண்டுகொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன் அவனை புரிந்து கொண்டால் அவன்தான் இறைவன்.

அன்பு சொந்தங்களுக்கு என்னுடைய வணக்கங்கள் ..கிரக சேர்க்கையில் மிகவும் தீய சேர்க்கையாக கருதப்படுவது  சனி செவ்வாய் சேர்க்கை.

             ஒரு ஜாதகத்தில் சனி செவ்வாய் சேர்ந்து இருப்பின் சுபர் சேர்க்கை அல்லது சுபர் பார்வை இல்லாமல் இருக்கும் சமயங்களில் சனியும் செவ்வாயும் அந்த பாவகத்தின் ஆதிபத்திய காரகத்துவங்களை சிதைத்து விடுகிறது என்றே சொல்ல வேண்டும் ..செவ்வாய் மிகவும் வேகமான ஒரு கிரகம் விவேகம் இல்லாதது ..முரட்டுத்தனம் பிடிவாதம் இரண்டும் இருக்கும் செவ்வாய் இடம் ..

                சனி சோம்பல் நயவஞ்சகம் பொய் பேசுதல் களவாடுதல். நம்பிக்கை துரோகம் இவற்றுக்கெல்லாம் காரகம் வகிப்பவர் சனி ..இருவரும் ஒரே கட்டத்தில் இணைந்திருந்து ஜென்ம பகை கிரக யுத்தம் அங்கே நடைபெறும்.

           சனி செவ்வாய் சேர்க்கை குரு நல்ல நிலையில் வலிமையான நிலையில் இருந்து பார்க்கும் பொழுது மட்டுமே இவர்கள் சுபத்துவம் அடைகிறார்கள் ..வளர்பிறைச் சந்திரன் அல்லது பௌர்ணமி சந்திரன் ஏழாம் பார்வையாக பார்க்கும்பொழுது. அங்கே சனியும் செவ்வாயும் ஏழாம் பார்வையாக சந்திரனையும் பார்க்கிறார்கள். அப்பொழுது சந்திரன் பங்க பட்டு விடுகிறார் என்றே சொல்ல வேண்டும் .


.அங்கே சனியின் பார்வை விழும் சந்திரன். சந்திரனின் ஆதிபத்திய காரகத்துவங்கள் பங்கப் பட்டு விடுகிறது ..இன்னும் சிலருடைய ஜாதகங்களில்  குருவும் வளர் பிறை சந்திரனும் அல்லது பவுர்ணமியை நெருங்கிக்கொண்டு இருக்கும் சந்திரன் இந்த சனி செவ்வாய் சேர்க்கை ஒருசேர பார்வையிடும் பொழுது. சனி மற்றும் செவ்வாயின் தீய காரகத்துவங்கள் முற்றிலுமாக வடிகட்டப்பட்டு சுபத்துவம் ஆன விஷயங்கள் ஜாதகருக்கு அந்த தசா காலங்களில் கிடைக்கிறது.

              சனி செவ்வாய் சேர்க்கை பெற்றவர்கள் ..பொதுவாகவே ரத்த தானம் செய்வது ரத்தத்தை தூய்மையாக வைத்துக் கொள்வது உடற்பயிற்சி மேற்கொள்வது தியானம் செய்வது. மனதையும் உடலையும் வலுப்படுத்தும் ..கீழ்நிலை உள்ள மக்கள் அல்லது தூய்மை பணியாளர்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்யும்பொழுது சனியின் தீய காரகத்துவங்கள் குறையும்.

    இது ஒரு பொதுவான விழிப்புணர்வுக்கான பதிவு யாரும் தங்களுடைய சுய ஜாதகத்தை பதிவிட்டு கேள்விகள் கேட்க வேண்டாம் ..சுய ஜாதக ஆலோசனை பெறுவதற்கு கட்டணம் உண்டு.


நண்பர்களே: நீங்கள் மீன ராசி மீன லக்னத்தில் பிறந்திருந்தால்( நீர் ராசி) மிக நல்லநேரம் வரத் துவங்கிவிட்டது குரு பெயர்ச்சி ராகு பெயர்ச்சி சனிப்பெயர்ச்சி அனைத்து உங்களுக்கு சாதகமாக உள்ளது...


 📌உங்கள் தொழிலில் கொடிகட்டி பறக்க வேலையில் உயர்வான பதவி செல்ல குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக இருக்கும் இவர்களுக்கு பிறந்த கால ஜாதகத்தில் கன்னிராசியில் செவ்வாய் சனி சேர்ந்திருந்தால் எவ்வளவு சம்பாதித்தாலும் அது உங்களுக்கு கையில் தங்காது..


 📌ஆனால் இப்போ இருக்கும் சூழ்நிலையில் அனைத்து கிரகங்களும் சாதகமாக உள்ளதால் நீங்கள் மனக்கோட்டை கட்டிய அனைத்து செயல்களும் நன்றாகவே இருக்கும் காலம் உங்களுக்கு கனிந்துள்ளது அதில் உள்ள பழங்களை பறிப்பதற்கு நீங்கள் உங்களை தயார் செய்து 

கொள்ள வேண்டும்.


📌சகோதர உறவு மேம்படும்( ராகு மூன்றாமிடத்தில் உள்ளது) திருமணம் உங்கள் விருப்பப்படி நடக்கும் வேலை மாற்றம் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றபடி இருக்கும். அரசியலில் நீங்கள் எதிர்பார்த்த மாற்றங்கள் மற்றும் அரசியலில் வெற்றி பெற மிக அருமையான வாய்ப்புகள்...




ஜோதிட தென்றல்

Astro Ashokjee

+91 6379140429

+91 7550238450

சனி + கேது:Astrologer Information-pallavaram,mudichur,padappai +91 6379140429

 





சனி + கேது

1.ஜாதகர் கர்மா விரக்தியானது

2சுகபோக வாழ்க்கையில் சிக்கல்

3.தொழில் திருப்தியின்மை

4. தொழிலில் ஆர்வமின்மை

5. சோதிடம், மாற்று மருத்துவம், வக்கீல்

வயரிங் , சந்திரன் தொடர்பு வரும் போது நூல் இவை திருப்தியான தொழில்.

6. ஆன்மிக ஈடுபாடு (or) போதைக்கு அடிமை

7. தொழிலில் .வேலையில் சட்ட நியாயம் பேசுதல் (or) திமிரு பேச்சு பேசுதல்.

8. இந்த இணைவு 30 வயது வரைமேற்சொன்ன பலன் தரும் அது வரை எந்த தொழில் முன்னேற்றம் இராது.

9. மூத்த சகோதரர் (இருந்தால்) வழி ஜாதகருக்கு நெருக்கடி இருந்து கொண்டு இருக்கும்.

10. ஜாதகரின் மூத்த சகோதர் மிக நொரண்டு

11. இதே போல் ஜாதகர் சித்தப்பா, மூத்த சகோதர் இருவரும் இறை திருப்பணி செய்ய

வாய்ப்பு உடையவர்.

12. சித்த மருந்தில் ஆர்வம் நம்பிக்கை வரும்.

13. சித்தர்கள் வழிபாடுகளில் ஆர்வம் இருக்கும்.

14. இந்த இணைவுடன் சந்திரன் சேரும் போது மனநிலை குழப்பம் …


ஜோதிட தென்றல்

Astro Ashokjee

+91 6379140429

+91 7550238450🙏

best astrologer old perungalathur-jathakam parkka -astrology tips



 


சனி + செவ்வாய்

1.சகோதரால் நன்மை இல்லை

2வண்டி வாகனத்தால் தொல்லை உண்டு

3.தொழில்கட்டிடத்தில் பிரச்சினை வரும்

4.கட்டிடம் பாழ் யடைந்ததோற்றம் இருக்கும்

5.உடற்பயிற்சியால் தொல்லை வரலாம்.

6தொழிலில் போட்டி பிரச்சினை உண்டு.

7 .இந்த கிரகம் இணைந்து இருக்கும் இடம்

உடல் பகுதியில் பாதிப்பு ஏற்படுத்தும்.

8.அதே போல இவ் இரு கிரகமும் சேர்ந்து பார்க்கும் இடமும் பாதிக்கும்

9. உடல்இரத்த ஓட்டத்தில் பிரச்சினை ஏற்படும்

பிரசர் போன்ற தொந்தரவு

10. இரத்த ஓட்டம் தடை பெற்று ஓடுவதால்


CONTACT:

ASTRO ASHOKJEE

+91 6379140429

TAMBARAM

#கருடபுராணம் - சில தகவல்கள் !karma true

 #கருடபுராணம் - சில தகவல்கள் !

==========================


இப்பூமியில் பிறந்த ஓவ்வோரு மனிதனும் இறந்த பின் இறுதியில் எங்கே செல்கிறான் என்ன ஆகிறான் என்பதை விளக்கமாக உரைக்கும் பதிவு இது..


சாவு வருவதற்கு முன்னும் வந்த பின்பும் உயிர்களை அச்சுறுத்தியோ அன்பு காட்டியோ அழைத்து செல்லும் அந்த 3 நபர்கள் யார்? அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள்? உயிர்களை எங்கே அழைத்துச்செல்கிறார்கள்? அவர்களின் பூர்வீகம் என்ன? என்பதைப்பற்றி ஆராய்ச்சி செய்வோம்.


இத்தகைய ஆராய்ச்சிகளுக்குப் பெரும் துணையாக இருப்பது புராணங்கள் ஆகும். புராணங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டால் உண்மைகளை முழுமையாகக் கண்டறிய முடியுமா?


அது நம்பத்தகுந்த வகையிலும் அமையுமா? என்றெல்லாம் சந்தேகம் எழுவது இயற்கையானது தான். காரணம் மிகைப்படுத்திக் கூறல் என்பது புராணங்களில் மிகுதியாகவே உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. ஆயினும் புராணங்கள் முழுமையான கட்டுக்கதைகள் என்று ஒதுக்கித் தள்ளிவிடவும் முடியாது. காரணம் புராணங்களில் கூறப்பட்டு இருக்கும் பல சம்பவங்களுக்கான அசைக்க முடியாத ஆதாரங்கள் பல நவீன விஞ்ஞானத்தால் கண்டறியப்பட்டுள்ளது. எனவே புராண விஷயங்களை பக்க சார்பற்று அலசி ஆராய்ந்து எடுத்த பல விஷயங்களை உண்மையென நம்பி அடுத்த விஷயங்களைப்பற்றிப் பார்ப்போம். 


இறந்தவர்களின் ஆத்மாவை அழைத்துச் செல்ல மூன்று நபர்கள் வருவதாக இறந்தவர்களுக்கும் இறப்பில் இருந்து உயிர்ப்பித்து எழுந்தவர்களும் கூறுகிறார்கள்.


யார் அந்த முன்று நபர்கள்?

கிருஸ்துவம் அந்த 3 பேரையும் தேவதூதர்கள் என்கிறது.

இந்து மதமோ அவர்களை மரண தேவனான எமதர்மனின் தூதர்களான கிங்கரர்கள் என்கிறது.


யார் இந்தக் கிங்கரர்கள்? இவர்கள் எப்படி இருப்பார்கள்? இவர்களின் வேலை என்ன? கருட புராணம் இவர்கள் அஞ்சத்தக்க உருவத்தை உடையவர்கள் என்றும் நெருப்பையே சுட்டுவிடும் அளவிற்கு சினமுடையவர்கள் என்றும் பாசம் முசலம் போன்ற ஆயுதங்களைத் தரித்தவர்கள் என்றும் கார்மேகம் போன்ற இருண்ட நிற ஆடைகளை அணிந்தவர்கள் என்றும் வர்ணிக்கிறது.


அவர்கள் வாழ்நாள் முடிந்துபோன உயிர்களை மரண தேவனிடம் கொண்டு சேர்க்கவே படைக்கப்பட்டவர்கள் என்றும் ஆசா பாசங்களுக்கு இடம் கொடுக்காமல் கடமையைச் செய்வதே அவர்களின் பணி என்றும் மாறுபடுத்திக் கூறினாலும் பைபிளும் குரானும் இதே மாதிரியான விளக்கங்களையே இவர்களைப் பற்றித் தருகிறது.


மேலும் இவர்களுக்குப் பூமியில் உயிர்களை அறுவடை செய்து யமதர்மனின் கிட்டங்கியில் சேர்ப்பதோடு வேலை முடிந்து விடுகிறது. உயிர்கள் புரிந்த நன்மை தீமைகளை விசாரிப்பதும் அதற்கான சன்மானம் அல்லது தண்டனையை வழங்குவது எமதர்மனின் வேலை என்றும் தண்டனைகளை நிறைவேற்றுவது வேறு மாதிரியான கிங்கரர்கள் யக்ஷர்களின் வேலை என்றும் பழமையான நூல்கள் பலவற்றில் காண முடிகிறது.


உடலில் இருந்து உயிர் பிரிக்கப்பட்ட பின்பு அந்தந்த உயிர்களுக்கு என்ன நிகழ்கிறது என்பதைக்கருடபுராணம் கவிதா லாவண்யத்தோடு விவரிப்பதைப் பார்ப்போம்.

செடியிலிருந்து மலரைக்கொய்தபின் இறைவனின் பாதத்தில் சமர்பிப்பது போல் உயிர்கள் கிங்கரர்களால் யமன் முன்னால் சமர்ப்பணம் ய்யப்படுகிறது. தன் முன்னால் ஜீவன் கொண்டு வரப்பட்டவுடன் மீண்டும் அந்த ஜீவனை பறித்த இடத்திலேயே விட்டு வரும் படியும் மீண்டும் 12 நாட்கள் சென்றபின் தன் முன்னால் கொண்டு வரும்படியும் கட்டளை பிறப்பிப்பான்.

உடனே யமகிங்கரர்கள் ஒரு நொடி நேரத்திற்குள் 80 000 காத தூரத்தில் உள்ள பூமியில் உயிரைப் பறித்த இடத்தில் அந்த ஜீவனைக்கொண்டு விட்டு விடுவார்கள்.


இப்படி யமலோகம் சென்ற ஜீவன் மீண்டும் தனது உடல் இருக்கின்ற இடத்திற்கே திரும்பி வருவதனால் இறந்தவனின் உடலை சில மணி நேரமாவது ஈமக்கிரியைகள் செய்யாமல் வைத்திருக்க வேண்டும். காரணம் ஆயுள் முடியும் முன்பே அந்த ஜீவன் உடலை விட்டுப் போயிருந்தால் மீண்டும் உயிர் பெற்று எழ வாய்ப்புள்ளது.


செத்துப்பிழைத்தவர்கள் என்று கருதப்படும் நபர்கள் இத்தகையவர்களே ஆவார்கள். அப்படியில்லாது நிரந்தரமாக உடலை விட்டுச் சென்றவர்கள் பூமிக்கு வந்ததும் உயிரற்ற தனது உடலைப் பார்த்து அந்த உடலிற்குள் புகுந்து கொள்ள முயற்சிப்பார்கள். அந்த முயற்சி தோல்வி அடைவதனால் தாங்க முடியாத துயர வசப்பட்டு ஆவி வடிவில் இருந்தாலும் அழுது துடிப்பார்கள். தங்களது உடல் மயானத்திற்கு எடுத்து வரும்போதும் கூடவே வருவார்கள்.


அவர்களோடு மற்ற ஆவிகளும் கலந்து கொண்டு பாடையில் இருக்கும். உடல்மீது விழுந்து அழுத்துவார்கள். இதனாலேயே பாடை அளவுக்கு அதிகமான பாரத்தைக் கொடுக்கும். இதை பாடை தூக்கிகளில் அனுபவசாலிகள் நிதர்சனமாகவே அறிவார்கள். உடல் மயானத்தைச்சென்றடைந்தவுடன் தனது உடல் எரியூட்டப்படும் சிதைக்கு மே…

Monday, November 16, 2020

Astrology, Astrology tips,Astrologer in Tambaram,old perungalathur call@6379140429

 [07:28, 09/11/2020] Ashok Airtel: என் அன்பு  தமிழ் நண்பர்களே வணக்கம்:::  








 📍நான் அசோக் குமார் 25 வருடங்களாக ஜாதகம் பார்த்து வருகிறேன்.. உங்களுடைய ஜாதகம் திருமணம், உயர்கல்வி, பொருளாதாரம், பணத்தேவைகள், குடும்ப ஒற்றுமை, மற்றும் உடல் ஆரோக்கியம், எதிரிகள் தொல்லை ஆகியவற்றைக் கணிக்க முடியும்....


📍ஜாதகம் என்பது திருமணம் ஆனவுடன் மனைவி குழந்தைகள் அவர்களுடைய ஜாதகமும் உங்களுடைய எதிர்காலத்தை நிர்ணயிக்க கூடியதாகும்(Interlink)..

 

📍📍ஒரு சிலருக்கு திருமணம் ஆனவுடன் அவர் தொழிலில் முன்னேற்றம் அடைவார்.. அல்லது பின்னேற்றம் அடைவார்.. குழந்தை பிறந்தவுடன் அவருடைய புகழ் பொருளாதார முன்னேற்றம், அல்லது வீழ்ச்சி இரண்டில் ஒன்று நிச்சயம் நடக்கும் ஆகவே ஜாதகம் பார்க்கும் பொழுது அதற்குண்டான பரிகாரத்தையும் நாம் செய்ய வேண்டியது முக்கியம்... 


📌உதாரணத்திற்கு ஒரு சில ஜோதிட டிப்ஸ்

1) சுக்கிரன் ஏழில் இருந்தால் திருமண தடை காலதாமதமான திருமணம்...


📌2) எழில் செவ்வாய் சனி சேர்க்கை வயது முதிர்ந்த ஆணை அல்லது பெண்ணே திருமணம் செய்வது...


📌3) ஐந்தில் குரு அல்லது ராகு குழந்தை பிறப்பதில் தாமதம்...


📌4) குரு மகரத்தில் நீச்சம் தங்க நகைகள் உங்களிடம் தங்காது வட்டிக் கடையில் மட்டும் தான் இருக்கும் ...


📌5) உங்களுடைய லக்னத்திற்கு பதினொன்றில் சூரியன் இருந்தால் பழம் நழுவி பாலில் விழுவது போல் அரசாங்க வேலை கண்டிப்பாக கிடைக்கும்..


📌6) உங்களுடைய ஜாதகத்தில் செவ்வாய் நீசம் பெற்று அமைந்தால் சகோதர சகோதரிகளால் உங்களுக்கு எந்த ஒரு உதவியும் கிடைக்காது


📌7) உங்கள் ஜாதகத்தில் (செவ்வாய் சனி) சேர்ந்து இருந்தாள் கண்டிப்பாக கடன் பிரச்சனை  , வீடு வாகனம் பிரச்சினைகள் இருக்கும் இது தவிர்க்க முடியுமா என்று ஜாதகத்தில் பார்க்கலாம்


📌8) வீட்டுக் கடன் கிடைக்குமா, வாகன கடன் கிடைக்குமா, வாங்கிய கடனை  சரியான முறையில் திருப்பித் தரமுடியுமா, என்று உங்களுடைய ஜாதகத்தில் தெள்ளத் தெளிவாக இருக்கும்...


📌9) இருக்கிற வேலையை விட்டு புதிய வேலைக்கு செல்லலாமா அல்லது புதிய தொழில் தொடங்கலாமா என்ற மனக்குழப்பத்திற்கு ஒரு விடிவு கிடைக்கும்.


📌10) நீங்கள் திருமணமானவர் என்றால் உங்கள் மனைவி

& குழந்தை ஜாதகம் அனைத்தும் சேர்ந்ததே உங்கள் ஜாதகம் ஆக மாறிவிடும்.(INTERLINK)


 📍ஜாதகம் தொலைபேசி வழியாகவே அனைத்து விவரங்களையும் நீங்கள் கேட்டு பெற முடியும்... ஜாதகம் பார்க்க என்னை தொடர்பு கொள்ளுங்கள்.. நிச்சயமாக  நீங்கள் மற்றவரிடம் ஜாதகம் பார்ப்பதற்கும் நீங்கள் என்னிடம் பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கும் அதில் மாற்று கருத்து கிடையாது....


📍ஜோதிடம் என்பது ஒரு கடல் அதை நீங்கள் திறமையான ஒரு நபரிடமிருந்து கேட்டுப் பெறும் ஒரு நல்ல தகவல்,  உங்களுக்கு சில நாட்களில் உங்கள் பிரச்சினை தீர்வு அடையும்.....


📍📍உங்கள் உள்ளத்தில் இருக்கும் பல கேள்விகளுக்கு நான் சொல்லும் விடைகள் உங்களுக்கு மிக சரியானதாகவே இருக்கும் நல்லதே நடக்கும..


இனியும் தயக்கமென்ன தொலைபேசி வாயிலாக என்னை தொடர்பு கொள்ளுங்கள்.... தயக்கமே தோல்வியின் முதல் படி இனி வெற்றி கொடி பறக்கட்டும் உங்கள் வாழ்க்கையில்...


📍📍ஜோதிட தென்றல்

Astro Ashokjee

Whatsapp Number

+91 6379140429

+91 7550238450📍📍

Chennai

Tamilnadu

INDIA..


Astrologer Tambaram call 6379140429 -future prediction

 1-வர்க்கோத்தமம் பெறும் கிரகங்கள் தரும் பொதுவான பலன்கள்.


லக்னம் வர்க்கோத்தமமானால் அது மிகவும் 

 சிறப்புடையதாகும்.மிக எளிதாக தலைமைப் பதவிக்கு வந்து விடுவார் கள்.உயர்ந்த லட்சியம் பெயர் புகழ் கீர்த்தி ஆயுள் பெருந்தன்மை இருக்கும்.


சந்திரன் வர்க்கோத்தமமடைவது 

என்பது ராசி வர்க்கோத்தமம் என்பதா

கும்.பெண்கள் தாய்வழி ஆதரவு இருக்

கும்.அழகு கவர்ச்சி இருக்கும்.கதை கவிதை பாடல்கள் இசைத்துறை போன்றவற்றில் பிரபலமடைவார்கள்.

சிறந்த கலாரசிகர்கள்.தனிமையை விரும்புகின்றவர்கள்.இயற்கையை நேசிப்பவர்கள்.


சூரியன் வர்க்கோத்தமம்.உயர்ந்த கொள்கை இலட்சியம் உடையவர்கள்

பொதுவாழ்க்கை பொதுத் தொண்டில் ஈடுபடுவார்கள்.உயர்ந்த பதவிகள் தேடி வரும்.அரசாங்கம் அரசியல் தொடர்புகள் உண்டாகும்.

2-உங்கள் ஜாதகத்தில் லக்னத்தில் சூரியன் இருந்தாலும் அல்லது லக்னத்தை சூரியன் பார்த்தாலும் உங்களிடம் ஒரு ஆளுமை தன்மை இருக்கும்.. 
தான் பெரியவன் என்ற தோரணை. அகங்காரம் ஆசை மற்றும் 
விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லாத ஒரு சூழ்நிலை ஏற்படும்.

3-உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் புதன் சேர்க்கை இருந்தால் மதன கோபால யோகம்,, கலை உணர்வு மிக்கவர்கள், இனிமையான பேச்சு, தொழிலில் புதுமை, அழகான தோற்றம், பல நண்பர்கள் இருப்பார்கள் குரு பார்த்தால் தன் துறையில் வித்தகர்கள்.. பெற்றோருக்கு பேர் சொல்லும் பிள்ளைகள் இவர்களே...

4- உங்கள் ஜாதகத்தில் குரு புதன் சேர்க்கை இருந்தாள் உங்களின் நண்பர்கள் வட்டாரம் மிகப் பெரியது நண்பர்கள் உங்களுக்கு பணம் உதவி, உடல் உழைப்பு உதவி புரிவார்கள்.  இந்த சேர்க்கை மறைவு ஸ்தானத்தில் அதாவது லக்னத்தில் இருந்து 6,8,12 இல் இருந்தாள் உங்கள் நண்பர்கள் கூட இருந்து குழி  பறிப்பார்கள்..

ஜோதிட தென்றல்
Astro Ashokjee
+91 6379140429
+91 7550238450

 இவர்கள் அரசியலுக்கு வந்தால் வெற்றி பெறலாம் குரு பார்த்தால் வெற்றி நிச்சயம் ஆனால் சூரியனுடன் ராகு அல்லது கேது சேர்க்கை பெறக்கூடாது

Best astrologer tambaram mudichur old perungalathur

 1-இந்த குருப்பெயர்ச்சியில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் (மகரம் கும்பம் மேஷம் மிதுனம் சிம்மம் விருச்சிகம் துலாம்)

2-திருக்கணிதப்படி குரு பெயர்ச்சி 20/11/20 நடைபெறுகிறது தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு குரு பெயர்ச்சி ஆகிறார் திருப்பங்கள் நிறைந்த குருபெயர்ச்சி

3-6,8,12 ஆம் இடத்துக்குரியவர்களுடன் சனி சேர்ந்து இருந்தாலோ அல்லது 6,8,12 ஆம் இடத்துக்குறியவர்கள் நின்ற ஸ்தானத்திற்குத் திரிகோண ஸ்தானத்தில் சனி நின்று இருந்தாலோ அந்த ஜாதகன் பலமுறை உயிராபத்துகளையும் ,விபத்துகளையும் சந்திக்க நேரிடும்...

4-ஒவ்வொரு ஆணும் பெண்ணும் இராமாயணம் மகாபாரதத்தில் வரும் கதாபாத்திரம் கலந்த கலவையாகத் தான் இருக்க முடியும் ! பாஸிடிவ் நெகடிவ் கலந்த ஒரு புதிய பரிமாணம் ! இது மிகவும் ஆபத்தானது ! எந்த நேரம் ஸ்ரீராமன் ! எந்த நேரம் இராவணன் ! எந்த நேரம் சீதை ! எந்த நேரம் சூர்ப்பனகை ! எந்த நேரம் கண்ணன் ! எந்த நேரம் சகுனி ! எந்த நேரம் தருமன் ! எந்த நேரம் துரியோதனன் ! எந்த நேரம் கிருஷ்ணை ! எந்த நேரம் காந்தாரி ! ஏதும் சொல்ல முடியாது ! எங்கே நடக்கும் எது நடக்கும் என்பதை யாரறிவார் !

5-உங்கள் ஜாதகத்தில் (புதன் ராகு) சேர்க்கை , புதன் ராகுவின் நட்சத்திரத்தில் இருந்தாலும். ராகு புதன் நட்சத்திரத்தில் இருந்தாலும். காற்றில் கதை எழுதுவது.. கற்பனையில் கோட்டையை கட்டி அதில் வாழ்வது.. இவர்களே இவர்கள் பல மொழிகள் தெரிந்த வித்தகர்கள்.. அதிகம் செலவு செய்ய தூண்டுபவர்கள். பொய்யை உண்மை போல் பேசும் உத்தமர்கள் ஒருதலைக் காதல் நாயகர்கள் இவர்களே. குரு பார்க்க  பலன்களும் மாறுபடும் 🐊


6- நீங்கள் கும்ப ராசி OR கும்ப லக்னத்தில் பிறந்தவராக இருந்தாள் இவர்கள் பெரும்பாலும் குடும்பத்தில் மூத்தவராக இருப்பார்... இது ஒரு ஆண் இலக்கணம் ஆன் ராசி மனோதைரியம் உடையவர்கள் கடவுள் பக்தி குறைவாக உள்ளவர்கள் இவர்கள் பேச்சை அனைவரும் கேட்க வேண்டும் என்பது இவர்களின் நோக்கமாக இருக்கும்... தான் செய்யும் வேலையில் கெட்டிக்காரத்தனம் உடையவர்கள்... இந்த ராசிக்கு பாதகாதிபதி ராசி துலாம் ராசி

Astro Ashokjee

+91 6379140429

tambaram west


சுக்கிரன்+ராகு, புதன்+சுக்கிரன்+ராகு,செவ்வாய்+சுக்கிரன்+ராகு

 சுக்கிரன்+ராகு செவ்வாய்+சுக்கிரன்+ராகு புதன்+சுக்கிரன்+ராகு சுக்கிரன்+சூரியன்+புதன்+ராகு சூரியன்+ராகு புதன்+ராகு..   இணைவு  எனில் ஜாதகரும்....